கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குள்ளக்காபாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக் நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் திருமலைச்சாமி என்பது தெரியவந்தது.

மேலும் திருமலைசாமி தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் திருமலைச்சாமியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 5 லாட்டரி சீட்டுகள், 740 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.