சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணி பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஞானவேல்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று தரமணி ரயில் நிலையம் அருகே இருக்கும் பாலத்தின் கீழ் ஞானவேல் மது அருந்தியுள்ளார். அதே இடத்தில் பெருங்குடி கல்லுகுட்டை பகுதியில் வசிக்கும் 3 மர்ம நபர்களும் மது அருந்துள்ளனர். இந்நிலையில் ஞானவேலுக்கும் மர்ம கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் ஞானவேலை கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த ஞானவேலை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஞானவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.