கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ்குளம் குன்றுவிளை பகுதியில் ஜான் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி விமலா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று விமலா வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.

இந்நிலையில் வழுதலம்பள்ளம் பகுதியில் சென்ற போது விமலா தனது கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மர்ம நபர்கள் யாரோ தங்க நகையை அபேஸ் செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விமலா கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நகையை திருடி சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.