தமிழகம் முழுவதும் நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. பொதுவாகவே கோடை விடுமுறை தொடங்கி விட்டால் மாணவர்கள் அங்கும் இங்குமாக சென்று தனது நண்பர்களுடன் பொழுதை கழிப்பது வழக்கம்.

அதில் சில விபரீத நிகழ்வுகளும் நிகழ்ந்து விடுகின்றன. என் நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டுமானப் பணியில் மின்சாரம் தாக்கி 2 பள்ளி மாண வர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வறுமை காரணமாக கோடை விடுமுறையில் ரவி மற்றும் ஹரீஷ் கட்டுமான பணிக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.