தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பனைமரத்துப்பட்டியில் சிங்காரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த 28-ஆம் தேதி சிங்காரம் எம்.வேட்ரப்பட்டி கிராமத்தின் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்ற வீட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது சிங்காரத்தின் மகன் விஜய், கண்ணம்மாள், மருமகன் இளவரசன் ஆகியோர் தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த சிங்காரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விஜய், கண்ணம்மாள், இளவரசன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.