தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டி மேச்சேரியான் கொட்டாய் பகுதியில் காட்டுப் பன்றி கறி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தீர்த்தமலை வனச்சரகர் பெரியண்ணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது அதே பகுதியில் வசிக்கும் மன்னன், திருப்பதி, ஜெயசங்கர் ஆகிய மூன்று பேரும் காட்டுப்பன்றி கறி வைத்திருப்பது தெரியவந்தது.

அவர்கள் விவசாய நிலத்தில் போடப்பட்ட கம்பி வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டு பன்றியை வெட்டி கறி வைத்திருந்தனர். இதனால் மூன்று பேருக்கும் வனத்துறையினர் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வித்தனர். இதனையடுத்து வனத்துறையினர் காட்டுப்பன்றி கறியை பறிமுதல் செய்து வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.