கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பிலிருந்து அரசு பேருந்து பயணிகளுடன் விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கோபாலபுரம் மாதா கோவில் பேருந்து நிறுத்தத்தில் வந்த போது அந்த வழியாக குருடாயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி அரசு பேருந்தின் மீது மோதியது. மேலும் மோதிய வேகத்தில் லாரி சாலையோரம் இருந்து தோட்டத்திற்குள் புகுந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த இன்பத் தமிழன், பிரதீபா, ராதா, தர்ஷினி, சதீஷ் உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.