கடலூர் மாவட்டத்தில் உள்ள பீச் ரோடு என்.ஜி.ஓ நகரில் ஓய்வு பெற்ற ஆசிரியரான பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் சம்பத்குமார்(65) என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக இரண்டு தவணையாக பாஸ்கரன் இடமிருந்து மூன்றாக லட்ச ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். ஆனால் அந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பத்குமார் தான் வாங்கிய பணத்தை எடுத்து கொள்ளுமாறு பாஸ்கரனியிடம் காசோலையை கொடுத்துள்ளார். அந்த காசோலையை வங்கியில் கொடுத்த போது பணம் இல்லாமல் திரும்ப வந்தது. இதுகுறித்து பாஸ்கரன் கடலூர் தேவனாம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சம்பத்குமார் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.