திருச்சி மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டி பகுதியில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முத்துலட்சுமிக்கு கீரணிப்பட்டியில் வசிக்கும் ஜீவானந்தம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஜீவானந்தம் அவரது தாய் சரஸ்வதி உள்ளிட்டோர் 5 லட்ச ரூபாய் பணம், 100 பவுன் தங்க நகை ஆகியவற்றை வரதட்சணையாக கேட்டு முத்துலட்சுமியை தகாத வார்த்தைகள் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முத்துலட்சுமி மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜீவானந்தம், சரஸ்வதி உள்பட 10 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.