விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் வசிக்கும் 30 வயது பெண் ஹோட்டலுக்கு சாப்பாடு வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது விருதுநகர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் மணிமாறன் என்பவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மணிமாறனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.