சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னங்குறிச்சி ஆறுமுக ஐயர் தெருவில் நீலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் கிருஷ்ணன் சென்னையில் இருக்கும் தனது மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை, 15 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.