சேலம் வழியாக கோவை கேரளா செல்லும் ரயில்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பரதம் பட்டேல், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சம்சுதீன் ஆலம் என்பது தெரியவந்தது.

இருவரும் திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ரயில் ஏறி முன்பதிவு பெட்டிகளில் தூங்கும் பயணிகளின் செல்போன்களை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 1 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 9 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.