திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருவளத்தூர் வடக்கு தெருவில் விவசாயியான சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சிவசாமி தனது குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரம் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை, 3 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.

மறுநாள் காலை கண்விழித்து பார்த்த சிவசாமி நகை மற்றும் பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சிவசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.