திருச்சி மாவட்டத்தில் உள்ள எலூர்பட்டி பாலவாத்து கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இனாம்குளத்தூரில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சாப்பிடுவதற்காக முருகேசன் சாலையை கடந்து சென்றார்.

அப்போது திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து முருகேசன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்து போலீசார் அங்கு சென்று முருகேசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.