திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை குறிஞ்சி நகர் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக கடத்தியது தெரியவந்தது. இதனால் போலீசார் ரேஷன் அரிசியுடன் காரை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து மணப்பாறையை சேர்ந்த பாரதி, கார் டிரைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீவிர வாகன சோதனை…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
எப்படில்லாம் ஏமாத்துறாங்கப்பா… ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன மோசடி…. முன்னாள் வங்கி ஊழியர் கைது…!!!
சென்னை சூளைமேடு பகுதியில் கார்த்திக் வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டதாகவும் அதை வைத்து யாரோ ஒருவர் பணத்தை திருடுவதாகவும் கூறி இருந்தார்.…
Read more“தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்ஸ்” …. விபரீத முயற்சியால் கால்கள் துண்டாகி உயிரிழந்த குழந்தை….!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் வினிஷா (24). இவர் சென்னையில் உள்ள தி.நகரில் கடந்த ஒரு வருடமாக தங்கி ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செல்வமணி (29)என்ற வாலிபரை காதலித்து வந்ததோடு அவருடன் திருமணம் செய்யாமலேயே நெருங்கி பழகியுள்ளார்.…
Read more