கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி போலீஸ் லைன் 4-வது தெருவில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். நேற்று சுப்பிரமணியனின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சுப்பிரமணியன் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். மேலும் உடல் நல குறைவால் சுப்ரமணியன் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.