கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னாலகரத்தில் பூவராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். நேற்று காலை 11 மணிக்கு இவர்களது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 31 ஆயிரம் ரூபாய் பணம், வீட்டு உபயோக பொருட்கள், கூரை வீடு முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.