தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டி பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு 13 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் சிறுமியின் வீட்டிற்கு வெட்டிபாளையத்தைச் சேர்ந்த உறவுக்கார பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் சிறுமி எனது வீட்டில் 2 நாட்கள் தங்கி இருக்கட்டும் என பெற்றோரிடம் கூறி அழைத்து சென்றுள்ளார்.

கடந்த 30-ஆம் தேதி திடீரென அந்த பெண் சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் நேரில் சென்று கேட்டபோது சிறுமியை அனுப்ப மறுத்துவிட்டனர். இதுபற்றி சிறுமியின் தாய் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.