திருச்சி மாவட்டத்தில் உள்ள வலையப்பட்டி பகுதியில் தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் துறையூரில் இருக்கும் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக தேவி தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் தேவியிடம் டியூஷன் படித்த 10-ஆம் வகுப்பு மாணவரின் செயல்பாடுகளில் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தனது மகனை கண்காணித்தனர்.

அப்போதுதான் மாணவர் இரவு நேரங்களில் தேவியுடன் அதிகநேரம் பேசுவதும், மாணவர் படிப்பில் கவனம் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது. மேலும் தேவி மாணவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கப்பதிவு செய்த போலீசார் தேவியை கைது செய்தனர். பின்னர் மாணவரை குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.