தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சென்னப்பன்கொட்டாய் கிராமத்தில் குப்பம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று குப்பம்மாள் ஆடுகளை மேய்த்து விட்டு தனது வீட்டிற்கு அருகே கட்டியுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முனியப்பன் ஆடுகள் கட்டுவது தொடர்பாக மூதாட்டியுடன் தகராறு செய்துள்ளார்.

மேலும் முனியப்பன் மூதாட்டியை தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் முனியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.