திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரும்பப்பட்டியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவேல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மதியம் வடிவேல் பழனி பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த 2 மர்ம நபர்கள் வடிவேலுவை அரிவாளால் வெட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து வடிவேல் தப்பிப்பதற்காக ஓடினார். ஆனாலும் அவர்கள் ஓட ஓட விரட்டி சென்று வடிவேலை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வடிவேலுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட வடிவேல் மீது கொலை முயற்சி, அடிதடி என ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. எனவே முன்விரோதம் காரணமாக யாராவது வடிவேலை கொலை செய்தார்களா? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.