
திருச்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தோட msme நிறுவனங்கள் தான் பெல் பொதுத்துறை நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்களை வழங்கிட்டு வந்தாங்க. தற்போது பெல் நிறுவனத்திடம் கேட்பானையால் இந்த பகுதிகளில் செயல்பட்டு வருகின்ற msme நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்காங்க. எனவே பெல் நிறுவனம் மீண்டும் அதிகப்படியான கேட்பானைகளை இவங்களுக்கு வழங்க ஆவணம் செய்யப்பட வேண்டும் என்று மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிந்த ஒன்றுதான் கடந்த மாசம் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவுகள், தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமா அந்த மாவட்டங்களில் பொது உட் கட்டமைப்புகளை பொறுத்து சேதம் அடைந்திருக்கு. மக்கள் வாழ்வாதாரமும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கு. எனவே அவற்றை கடுமையான இயற்கை பேரிடமே அறிவிச்சு தேசிய பேரிட நிவாரணங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதிகளை வழங்க தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்ந்து கோரிக்கையாக வைக்கிறோம் என்று எண்ண வேண்டாம். பறந்து விரிந்த இந்திய திரு நாட்டுல கோடிக்கணக்கான மக்களுக்கு நெருக்கமாய் இருந்து கல்வி, மருத்துவம், அவசிய தேவைகள், உதவிகள் ஆகியவற்றை செஞ்சு தர வேண்டிய முக்கிய கடமை மாநில அரசுகளுக்கு தான் இருக்கு. மாநிலத்திற்காக கோரிக்கை வைக்கிறதும், மாநில உரிமைகளை நிலைநாட்டுறதும் அங்கு வாழ்கின்ற மக்களுடைய கோரிக்கைகள் தான் தவிர, அவை அரசியல் முழக்கங்கள் அல்ல. அந்த வகையில் தமிழ்நாடு அரசுயின் கோரிக்கைகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் நிச்சயமாக நிறைவேற்றி தருவார் என நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.