அண்மையில் கர்நாடகாவிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி திரை துறையினர், விளையாட்டு துறையினரை அழைத்து பேசினார். அதிலும் குறிப்பாக கேஜிஎப் பட குழுவினரையும் காந்தாரா இயக்குனரும் நடிகருமான ரிஷப் செட்டியை சந்தித்து பேசினார். இவர்களின் சந்திப்பு புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதுகுறித்து ரிஷப் செட்டி தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு ஊக்கமளிக்கிறது. புதிய இந்தியா மற்றும் முற்போக்கு கர்நாடகத்தை வடிவமைப்பதில் பொழுதுபோக்கு பங்கு குறித்து விவாதித்தோம். பிரதமரின் தொலைநோக்கு பார்வை எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. இந்த ஊக்கம் எங்களுக்கு பலம் என தெரிவித்துள்ளார்.