ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers ஆவணப் படத்தின் நாயகர்களான யானைகள் ரகு, அம்மு மற்றும் யானைகளை வளர்த்த பொம்மன்-பெள்ளி தம்பதியினரிடம் என்ற பிரதமர் மோடி உரையாடினார். அதன்பின் எந்த உதவி தேவை என்றாலும் பிரதமர் தன்னிடம் கேட்க சொன்னார் என்று பொம்மன், பெள்ளி தம்பதியினர் கூறினர்.

இந்நிலையில் காங்கிரஸில் உள்ள பல தலைவர்கள் மோடியிடம் இருந்து அரசியல் தந்திரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என திமுக எம்பி செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார். டுவிட்டரில் நீலகிரியில் பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்த பிரதமரின் புகைப்படத்தை பகிர்ந்த செந்தில்குமார், அரசியல் தந்திரம் செய்வதில் இந்த மனிதர் கைதேர்ந்தவர். கிடைக்கும் வாய்ப்புகளை ஒருபோதும் தவறவிடாதீர்கள். ஒவ்வொரு வாய்ப்பையும் மூலதனமாக்குங்கள் என்று கூறியுள்ளார்.