டெல்லி திகார் சிறைச்சாலையானது பாதுகாப்பு நிறைந்தது ஆகும். பாதுகாப்பு அதிகமுள்ள இந்த சிறைச்சாலையில் கடந்த 2-ம் தேதி பிரபல ரவுடி சுனில்மான் என்ற தில்லு தாஜ்பூரியா என்பவன் வெறி கும்பலால் அடித்து கொல்லப்பட்டான். சிறைச்சாலைக்குள் கொலை செய்யப்பட்ட தாஜ்பூரியா மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருக்கிறது. யோகேஷ் துண்டா மற்றும் அவரது கூட்டாளிகள் அவனை அடித்து கொலை செய்தனர்.

இப்படி ரவுடி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது சிறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாஜ்பூரியா அடித்து கொல்லப்பட்டபோது குறைந்தது 10 காவல்துறையினர் அதனை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது அம்பலமாகி உள்ளது.

அவ்வாறு கொலையை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவல்துறையினர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதுகுறித்து ஜெயில் நிர்வாகம் இதுவரையிலும் 30 உதவி கண்காணிப்பாளர் உள்பட 9 அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து உள்ளது. தமிழக சிறப்பு போலீஸ் படையை சேர்ந்த 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்கள். இச்சம்பவம் குறித்த ஒரு அறிக்கையை சம்மந்தப்பட்ட ஜெயில் நிர்வாகம் டெல்லி துணை நிலை கமிஷனருக்கு சமர்ப்பித்திருக்கிறது.