நெல்லை காந்தி நகர் பகுதியில் அமைந்திருக்கும் ராணி அண்ணா அரசு கல்லூரி மாணவிகள் பஸ் வசதி இல்லாததால் கிடைத்த பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில், படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த காட்சி காண்போரை காண்கலங்க வைத்துள்ளது.

பெண்களுக்கு பயணம் செய்ய கட்டணம் இல்லா பேருந்து, புதுமைப் பெண் திட்டம் என அவர்கள் பயன்பெறும் திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. அதேபோல் அரசு பள்ளி-கல்லூரி மாணவிகள் மட்டும் பயணம் மேற்கொள்ள கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என நெல்லை மாணவ, மாணவியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.