சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், இன்றைய தினம் 13 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 13 மாவட்டங்களில் இன்றைய தினம் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டி நிலவக்கூடிய வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களிலும், அதேபோல புதுவை,  காரைக்காலிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அதேபோல் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு நல்ல மழை பொழிவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.