மத்தியப்பிரதேசம் மாநிலத்திலுள்ள ரேவா மாவட்டம் கைலாஷ்புரி கிராமத்தில் கடந்த 1ம் தேதியன்று அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. காவல்துறையினர் விசாரணையில், இந்த சம்பவத்தை அடுத்து இதே கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளது எங்களது தெரியவந்தது. இச்சிறுவனின் குடும்பத்தினர் இறந்த பெண்மணியின் வீட்டை விட்டு கொஞ்சம் தூரத்தில் தான் வசித்து வந்துள்ளனர். இவர்கள் வீட்டில் தொலைக்காட்சி கிடையாது.

ஆகவே tv பார்ப்பதற்காக சிறுவன் அவ்வப்போது அப்பெண்ணின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளான். அந்த நேரத்தில் பெண்ணின் வீட்டிலிருந்து ஒரு செல்போன் காணாமல் போனதால் சிறுவன் மீது பழி விழுந்து உள்ளது. மேலும் சிறுவனை அந்த பெண் கடுமையான வார்த்தைகளால் பேசி இனி வீட்டிற்கு வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து விரட்டியுள்ளார். இது கைலாஷ்புரி கிராமம் முழுவதும் அனைவருக்கும் தெரிந்து, சிறுவனை கேலி செய்துள்ளனர். இதன் காரணமாக சிறுவன் அந்த பெண்ணை பழித்தீர்க்க வேண்டும் என முடிவு செய்தான்.

அதன்படி கடந்த 30 ஆம் தேதி இரவு அந்த பெண்ணின் கணவரும், மகனும் வெளியே சென்றிருந்தனர். அப்போது சிறுவன் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை கடத்தி அருகிலிருந்த கட்டிடத்திற்கு கொண்டு சென்றுள்ளான். மேலும் அரிவாளால் பெண்ணை சரமாரியாக தாக்கி இருக்கிறான். இதனால் அந்த பெண் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். அதன்பின் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன், அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று பக்கத்து நகரத்தில் பதுங்கியுள்ளான் என்று காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.