பேடிஎம் பேமெண்ட் சேவைகளை பெறுவதற்கு மார்ச் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, பேடிஎம் பேமெண்ட் ஆப்ஸ் தொடர்ந்து செயல்படலாமா கூடாதா என்பது குறித்து தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் முடிவெடுக்கும்.

ரிசர்வ் வங்கி தடையால் பேடிஎம் வாலட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் 80 முதல் 85 சதவீதம் பேர் பாதிக்கப்பட மாட்டார்கள். மேலும் மற்றவர்கள் தாங்கள் வைத்துள்ள paytm upi ஆப்சை பிற வங்கிகளுடன் இணைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்