வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் என்ற பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் நிர்மல் (25) மீது திருட்டு போன்ற பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கு பதிவு செய்த வேலூர் தெற்கு போலீசார் நிர்மலை கைது செய்தனர். மேலும் அவரை வேலூர் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நிர்மலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்படி  நிர்மலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.