தமிழில் சாது திரைப்படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்தவர் தான் ரவீனா தாண்டன். மேலும் இவர் இந்தியில் அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு கே.ஜி.எப்-2 படத்திலும் நடித்து இருந்தார். அண்மையில் ரவீனாவுக்கு மத்திய அரசு உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இதற்கு சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் கிளம்பியது. அதாவது, ரவீனா நாட்டுக்காக என்ன செய்தார். திரையுலகில் கவர்ச்சியாக நடித்தவருக்கு பத்மஸ்ரீ விருது பெற என்ன அருகதை உள்ளது என்றெல்லாம் பதிவுகள் வெளியிட்டு கண்டித்து வந்தனர்.

இதற்கு ரவீனா தாண்டன் பேட்டி அளித்துள்ளதாவது “என்னை விமர்சிப்பவர்கள் கிளாமரை மட்டுமே பார்க்கின்றனர். அதற்கு பின்னால் உள்ள என் கடுமையான உழைப்பு அவர்களுக்கு தெரியவில்லை. நான் திரையுலகில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கவில்லை. பல சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் திரைப்படங்களில் கூட நடித்தேன். எனக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்ததை சிலர் விமர்சித்தாலும், எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் தான் அதிகம்” என்று அவர் கூறினார்.