தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னனி கதாநாயகியாக உள்ள சமந்தா, இப்போது “சாகுந்தலம்” என்ற புராண படத்தில் நடித்து உள்ளார். சமந்தா சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சமந்தா பேட்டி ஒன்றில் கூறியதாவது “எனக்கு சிறு வயதில் இருந்தே சரித்திர புராண படங்கள் பிடிக்கும். அதுபோன்ற திரைப்படங்களை விரும்பி பார்ப்பேன்.

மேலும் அது போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பதும் என் கனவாக இருந்தது. அப்போது தான் சாகுந்தலம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த 3 வருடங்களாக பல சவால்களை எதிர்கொண்டேன். சகுந்தலை கதாபாத்திரத்தை என்னால் ஏற்க முடியுமா என்ற பயமும் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் என்னால் முடியும் என நம்பிக்கையை கொடுத்தார். இப்படத்தில் நடித்ததால் எனது கனவு நிறைவேறியது” என்று அவர் கூறினார்.