தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய கீர்த்தி ஷெட்டி “உப்பென்னா’ திரைப்படம் வாயிலாக திரையுலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து ஷியாம் சிங்கா ராய், தி வாரியர் உள்ளிட்ட திரைப்படங்களின் வாயிலாக கவனம் ஈர்த்தார். இப்போது டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கஸ்டடி படத்தில் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக நடித்து உள்ளார் கீர்த்தி ஷெட்டி.

இந்நிலையில் கீர்த்தி ஷெட்டி, ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஜெயம் ரவியின் 32-வது படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை அறிமுக டைரக்டர் புவனேஷ் அர்ஜுனன் இயக்க இருக்கிறார். ரூ.100 கோடியில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி இணைந்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.