தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிம்பு நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த திரைப்படம் “பத்து தல”. எனினும் இந்த படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே உண்மை. முதல்நாள் இந்த படத்தின் வசூல் ரூபாய்.12 கோடிகள் வரை வந்தது. இருப்பினும் அடுத்தடுத்த நாட்களில் இந்த படத்தின் வசூல் குறைய துவங்கியது. இதனால் தமிழ்நாடு முழுவதும் ரூ.30 கோடி வரை கூட இத்திரைப்படம் வசூல் செய்யவில்லை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகிறது.

அதேபோல் டைரக்டர் வெற்றிமாறன் சூரி கதாநாயகனாக நடிக்கும் “விடுதலை” படத்தை இயக்கி உள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில் விடுதலை திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் கடந்திருக்கும் சூழலில், உலகம் முழுவதும் ரூ.30 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்துடன் வெளியான பத்து தல பல திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டு, அங்கு விடுதலை படத்திற்கான காட்சி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் விடுதலைப் படத்தின் வசூலானது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.