பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் இக்ரா ஜுவானி என்பவர் உடன் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் முலாயம் சிங்கிற்கு ஆன்லைன் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதை தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் பெண்ணான இக்ரா இந்தியாவிற்கு வர முயற்சி செய்துள்ளார். ஆனால் அவருக்கு விசா கிடைக்காத காரணத்தினால் அவர் நேபாளம் சென்றுள்ளார். அங்கு சென்று இக்கிராவை சந்தித்த முகாயம் அங்கேயே அவரை சட்டவிரோதமாக திருமணம் செய்து கொண்டு இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளார்.

அதன் பின் இவர்கள் இருவரும் பெங்களூருவிற்கு வந்து குடும்பம் நடத்தியுள்ளனர். அங்கு ஒரு இந்து பெண்ணாக வாழ்ந்த இக்ரா அவ்வபோது தொழுகை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார்  இக்ராவின் பாகிஸ்தான் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் பாகிஸ்தான் பெண்ணான இக்ரா சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இக்ரா பஞ்சாப் அழைத்துச் செல்லப்பட்டு வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.