கர்நாடக இசைக் கலைஞரும், பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ(58) லண்டன் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் நடைபெறயிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கு உள்ள ஓட்டலில் தங்கியிருந்த அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் லண்டனிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையானது ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் பாம்பே ஜெயஸ்ரீ குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து பாம்பே ஜெயஸ்ரீயின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள பதிவில் “அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.