சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட திரைப்படங்களை டைரக்டு செய்த ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் “பத்து தல”. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் கௌதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.

வருகிற 30ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பத்து தல படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது சிம்பு பேசியதாவது, “இப்படத்தில் அனைவருக்கும் அவர்களுடைய கதாபாத்திரத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை இயக்குனர் கிருஷ்ணா நல்ல செய்திருக்கிறார். கவுதம் கார்த்திக் மிகவும் கஷ்டப்பட்டாலும் அதை வெளிக்காட்டி கொள்ளமாட்டார் என்று அனைவரும் கூறுவார்கள். அந்த அளவுக்கு ஒரு வலியையும் ஜாலியாக எடுத்துக்கொள்பவர்கள் வாழ்க்கையில் தோற்றுப்போக வாய்ப்பே இல்லை. நிச்சயம் அவர்களது உயரம் பெரியதாக தான் இருக்கும் என்று அவர் கூறினார்.