சென்ற 2018ம்  வருடம் வெளியாகிய இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் தற்போது உருவான படம் “கண்ணை நம்பாதே”. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க, ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். அதோடு சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். வி.என் ரஞ்சித்குமார் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.

இந்த படம் கடந்த 17ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ஆத்மிகா கண்ணை நம்பாதே திரைப்படத்தை தன் தாத்தாவுடன் சேர்ந்து பார்த்துள்ளார். இதை சமூகவலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு “மகிழ்ச்சி என்பது உங்கள் தாத்தாவின் முகத்தில் பெருமிதம் பிரகாசிப்பதை பார்ப்பது. சுமார் 90 வயதுக்கு மேற்பட்டவர் தன் பேத்தி படத்தை பார்க்க சிரமம் இன்றி படிக்கட்டுகளில் ஏறினார். விலை மதிப்பற்ற இத்தருணங்களானது என்றும் பொக்கிஷமாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.