ஓ.பன்னீர் செல்வம் தனக்கு போட்டியே இல்லை என ராமநாதபுரம் ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஓபிஎஸ் போட்டியிட்டாலும் அவரால் இங்கு வெற்றிபெற முடியாது. அவரை பாஜகவின் முகமாகவே மக்கள் பார்க்கிறார்கள். பாஜகவை ஆதரிக்கும் யாரையும் இத்தொகுதி மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் நிச்சயம் படுதோல்வி அடைவார்கள்” என்றார்.