தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இறுதி கட்ட பணிகள் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சாலக்கோடு என்ற பகுதியில் நடக்கிறது. ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினி விமானத்தில் சென்றார்.

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த ரஜினியை பலர் சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க ஆர்வம் காட்டினார். அதன் பிறகு ரஜினிகாந்த் காரில் ஏறி அங்கிருந்து கிளம்ப தயாராக இருந்த நிலையில் காவல் அதிகாரி ஒருவர் ரஜினியிடம் செல்பி எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். உடனே ரஜினி காரில் இருந்து கீழே இறங்கி வந்து அவர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துள்ளார். ரஜினியுடன் சேர்ந்து காவல் அதிகாரிகள் தனித்தனியாகவும் குரூப்பாகவும் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.