கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சப்பானிப்பட்டு அருகே ஒரு கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த கார் மரத்தின் மீது மோதியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் படுகாயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் விபத்துக்குள்ளான காரை மீட்ட போது அதில் 33 குட்கா மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. காரில் வந்த ஒருவர் படுகாயமடைந்தார். மற்றொருவர் தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.