நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் இன்கோ நகரில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் ரகுமான் தனது தோட்டத்தில் உள்ள பாக்குமரத்தின் மீது ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து அப்துல் ரகுமான் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரகுமான் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.