வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் வியாபாரியான ராஜேஷ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சினி (30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜோசப் ஆபிரகாம்(8), கேசர்(6) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ராஜேஷ் தனது மனைவி, மகன்கள் தங்கை சித்ரா(27) ஆகியோருடன் நேற்று முன்தினம் காரில் ஊட்டி நோக்கி புறப்பட்டார். அந்த காரை பூவேந்திரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் இடுபாடுகளுக்குள் சிக்கி ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரஞ்சனி, சித்ரா, ஜோசப், கேசர், பூவேந்திரன் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.