கரூர் மாவட்டத்தில் உள்ள மலையூரில் புதுக்கோட்டை சேர்ந்த பால்ராஜ் என்பவர் எலக்ட்ரிகல் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.இந்நிலையில் பால்ராஜ் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் பால்ராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பால்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பால்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.