தேனி மாவட்டத்திலுள்ள சங்கராபுரத்தில் வினோத்குமார்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியுடன் பழகி வந்தார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வினோத்குமார் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் வினோத்குமாரை கைது செய்தனர்.