கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் பாத்திமா நகரில் கூலி வேலை பார்க்கும் பிராங்கிளின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று இரவு பிராங்கிளின் தனது மனைவியுடன் வீட்டில் அமர்ந்து நீண்ட நேரம் சிரித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜேஷ் நீங்கள் இரவில் சத்தம் போட்டு சிரித்து பேசுவதால் எனக்கு தூக்கம் வரவில்லை என கூறி தகராறு செய்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த ராஜேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிராங்கிளினை வெட்ட முயன்றார். உடனே சுதாரித்துக் கொண்ட பிராங்கிளின் அதனை தடுக்க முயன்ற போது அவரது இடது கையில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பல இடங்களில் வெட்டிவிட்டு ராஜேஷ் அங்கிருந்து தப்பி சென்றார். இதில் படுகாயமடைந்த பிராங்கிளின் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.