கரூர் மாவட்டத்திலுள்ள காந்தி கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்நிலையில் 6-வது மாடியில் இருக்கும் பெண்கள் வார்டுக்குள் புகுந்த ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வேலையில் இருந்த மருத்துவ அலுவலர் குமார் என்பவர் எதற்காக வீடியோ எடுக்கிறீர்கள் என அந்த நபரிடம் கேட்டுள்ளார். இதனால் அந்த நபர் குமாரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி வேலை செய்ய விடாமல் தடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் வீடியோ எடுத்தது தாந்தோணிமலையை சேர்ந்த சந்திரசேகரன்(40) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சந்திரசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.