விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். வெல்டனான சந்தோஷ்குமார் கிடங்கல்-1 பகுதியில் இருக்கும் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் நடந்து சென்றுள்ளார். அப்போது சிங்கனூர் காலனி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி பிரகாஷ் அங்கு சென்று தன்னை ஏன் வேலைக்கு அழைத்து செல்லவில்லை என கேட்டு தகராறு செய்துள்ளார்.

இதனையடுத்து பிரகாஷ் சந்தோஷ் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பல்வேறு இடங்களில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த சந்தோஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரகாஷை செய்து செய்தனர்.