திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலசெவல் பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி நாகர்கோவில் பள்ளிவிளை அம்மன் கோவில் இருக்கும் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பிரேம் குமாரை அவரது மகன் தர்மராஜ் பராமரித்து வந்துள்ளார். மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தையை தர்மராஜ் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வயது முதிர்வால் அவதிப்படும் தன்னை கவனிக்க யாரும் இல்லை நான் இருப்பதை விட சாவதே மேல் என முதியவர் தனது மகளிடம் கூறி அழுதுள்ளார்.

அவரை தர்மராஜ் சமாதானம் செய்துள்ளார். நேற்று காலை பிரேம்குமார் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் தர்மராஜுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் வீட்டில் இருந்து பார்த்தபோது தனது தந்தை தூக்கில் அழுகிய நிலையில் சடலமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேம்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.