திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு துரை அதே பகுதியில் வசிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் துரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த திருச்சி மகிளா நீதிமன்றம் துறைக்கு ஆயுள் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.